தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா

கிருஷ்ணகிரி, ஜூலை 25: சிப்காட்டுக்கு நிலம் வழங்க மறுத்து தனி கோட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளியில் சிப்காட் 3 மற்றும் சிப்காட் 5 அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி கடந்த 2016 முதல் நடந்து வருகிறது. அந்த நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.41 லட்சம் என மதிப்பிடப்பட்டு, கிணறு இருக்கும் பட்சத்தில் 100 சதவீத கூடுதல் தொகை மற்றும் 25 சதவீத ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதாக கூறி, நில எடுப்பு பணிக்காக தனி டி.ஆர்.ஓ., அலுவலகத்திலிருந்து விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை கருத்து கேட்பு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று நில எடுப்பு தனி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் திரண்டு வந்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்காமல் அலுவலகம் முன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில், நல்லகானகொத்தப்பள்ளியில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ள குண்டுகுறுக்கி, கோனேரிப்பள்ளி, குருபராதபள்ளியில் தென்பெண்ணையாற்றின் இடதுபுற கால்வாய் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. முப்போகம் விளையும் நிலத்தை சிப்காட்டிற்கு கொடுக்க மறுத்து 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

இருப்பினும் அரசு எங்கள் நிலங்களை எடுத்தே தீர வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. சாலைக்கு இடம் கொடுத்தோம், பொதுப்பணித்துறைக்கு இடம் கொடுத்தோம். தொடர்ந்து அருகிலுள்ள விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கேட்பது எவ்வகையில் நியாயம். போராட்டம் நடத்தும்போது அதிகாரிகள் சமரசம் பேசுகின்றனர். புதிய அதிகாரி வந்தவுடன் மீண்டும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றாக அழைத்து பேச வேண்டும் என்றனர்.

தொடர்ந்து அவர்களிடம் நில எடுப்பு தனி கோட்டாட்சியர் பூங்கோதை மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related News