கிருஷ்ணகிரியில் சிறுமி கடத்தல்
கிருஷ்ணகிரி, ஜூலை 31: கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தாள். கடந்த 5ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றாள். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவளை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதில், எங்களது மகள் செல்போனில் அடிக்கடி ஒருவருடன் பேசி வந்தாள். இதனால் அந்த நபர் தான் ஆசைவார்த்தை கூறி அவளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.