தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று 102-வது பிறந்தநாள் விழா; கரூர் மாவட்டத்தில் 1000 இடங்களில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை: வி.செந்தில்பாலாஜி தகவல்

கரூர் மாவட்ட கழக செயலாளர் வி.செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது: திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 102-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக கரூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது மற்றும் தமிழக அரசின் சாதனைகளை வீடு, வீடாக பொதுமக்களிடம் பிரசாரம் செய்தல், காலை 8.30 மணிக்கு கரூர் வெண்ணைமலையில் அமைந்துள்ள அன்புகரங்கள் ஆதரவற்றோர் சேவை மையத்தில் மாவட்ட கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்க மாவட்ட கழகம் மற்றும் மாநகர பகுதி கழக நகரம், ஒன்றிய பேரூர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இன்று காலை கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயம், சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) அலுவலகம் அருகில், கரூர் பஸ் நிலையம், சர்ச் கார்னர் லைட் ஹவுஸ், ராயனூர், தான்தோன்றிமலை, வாங்கபாளையம், வேலுச்சாமிபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கலைஞர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை மாநகர செயலாளர் எஸ்.பி. கனகராஜ், பகுதி கழக பொறுப்பாளர்கள் தாரணி சரவணன், ஜோதிபாசு, புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் கோயம்பள்ளி பாஸ்கரன், பி.முத்துக்குமாரசாமி, வி.கே.வேலுசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாலை சுப்பிரமணி, மாநகர பிரதிநிதி எஸ்.வடிவேல், மாவட்ட திமுக நிர்வாகிகள் என்.ஆர்.எம்.பி. சிவசண்முகம், டிஜிட்டல் சம்பத்குமார், எஸ்.வடிவேல், பகுதி கழக வர்த்தக அணி அமைப்பாளர் அழகர்சாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட செயலாளர் வி.செந்தில்பாலாஜி அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

Related News