தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலை, மாலை நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு தேவை

 

க.பரமத்தி, ஜூலை 28: சின்னதாராபுரம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு போலீசாரை பணியமர்த்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னதாராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகள் சின்னதாராபுரம் தென்னலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இதில் பள்ளிகளை சுற்றியுள்ள கிராம புறங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி தொடங்கும் மற்றும் விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்க முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.

ஒரு சில நேரங்களில் பள்ளி விடும் வேலைகளில் மாணவ, மாணவிகள் வீட்டிற்கு செல்லும் ஆர்வத்தில் வேகமாக பள்ளியை விட்டு வெளியே வருகின்றனர். இப்பள்ளிகள் உள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி சின்னதாராபுரம் தென்னலை நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் தொடங்கும் மற்றும் விடும் நேரங்களில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News