ஆடி அமாவாசையை முன்னிட்டு நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை காவிரி கரைகளில் தர்ப்பணம்
கரூர், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை போன்ற பகுதிகளில் காவிரி கரையோரம் நேற்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் கோயில்களில சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று, கடலோரம், ஆற்றோரம் போன்ற பகுதிகளுக்கு சென்று தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளான நெரூர், தவிட்டுப்பாளையம், வாங்கல், மாயனு£ர், திருமுக்கூடலு£ர், குளித்தலை போன்ற காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு நு£ற்றுக்கணக்கானோர் சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்துச் சென்றனர். இதனால், கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் நேற்று அதிகளவு பொதுமக்கள் வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாட்களில் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதன்படி, நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, கரூர் ஈஸ்வரன் கோயில், மாரியம்மன் கோயில், வெங்கட்ரமண சுவாமி கோயில், வெண்ணைய்மலை முருகன் கோயில், தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.