தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி அமாவாசையை முன்னிட்டு நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை காவிரி கரைகளில் தர்ப்பணம்

கரூர், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை போன்ற பகுதிகளில் காவிரி கரையோரம் நேற்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் கோயில்களில சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று, கடலோரம், ஆற்றோரம் போன்ற பகுதிகளுக்கு சென்று தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளான நெரூர், தவிட்டுப்பாளையம், வாங்கல், மாயனு£ர், திருமுக்கூடலு£ர், குளித்தலை போன்ற காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு நு£ற்றுக்கணக்கானோர் சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்துச் சென்றனர். இதனால், கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் நேற்று அதிகளவு பொதுமக்கள் வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாட்களில் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதன்படி, நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, கரூர் ஈஸ்வரன் கோயில், மாரியம்மன் கோயில், வெங்கட்ரமண சுவாமி கோயில், வெண்ணைய்மலை முருகன் கோயில், தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.