தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கடந்த ஆண்டு கட்டப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அதிகாரிகள் ஆய்வு

க.பரமத்தி, ஜூலை. 24: நிலத்தடி நீர் மட்டம் உயர மழைநீர் சேமிப்பு திட்டம் அவசியம் தேவை என்பது குறித்த மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம் உள்ளிட்ட 30 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் போதிய மழை இல்லை. எனவே நிலத்தடிநீர் மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இதனால் ஒரு சில குக்கிராமங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புதிய வீடுகள் கட்டும்போது அதில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கவேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது குறித்து எவ்விதமான விழிப்புணர்வையும் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்களால் ஏற்படுத்தவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீடுகள் தோறும் கட்டப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை மீண்டும் சரி செய்ய பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். வரும் காலங்களில் மழை பெய்தால் மழைநீர் வீணாக வாய்ப்புள்ளது.

கடந்த 8ஆண்டுகளுக்கு முன் குடிசை வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் ஆகியவைகளில் கூட மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென அதிகாரிகள் குழுவினர் தனியாக அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்து விளக்கம் அளிப்பது, பொது இடங்களில் பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.