தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோதுமை வழங்காததால் ரேஷன்கடை ஊழியரிடம் தகராறு

 

வேலாயுதம்பாளையம், ஆக 1: கோதுமை வழங்காததால் ரேஷன்கடை ஊழியரிடம் தகராறு செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வேகேட் அருகே புதுக்குறுக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசுகி (27). இவர், கரைப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாசுகி ரேசன் கடையில் இருந்த போது கரைப்பாளையம் பூலாங்காலனி பகுதியைச் சேர்ந்த பூபதி( 64 ).

விவசாயி. இந்நிலையில் கரைப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு பூபதி சென்று வாசுகியிடம் 5 கிலோ கோதுமை கேட்டுள்ளார். அதற்கு கோதுமை இல்லை என்று வாசுகி கூறியுள்ளார் . இந்நிலையில் வாசுகி திருக்காடுதுறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலகப் பணி காரணமாக இருந்துள்ளார்.

அங்கு குடிபோதையில் சென்ற பூபதி ,வாசுகியை பார்த்து அலுவலகத்தில் இருந்து வெளியே வருமாறு தகாத வார்த்தைகளால் திட்டி நான் கோதுமை கேட்டால் கொடுக்க மறுக்கிறாய். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி, வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.