தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

 

Advertisement

கரூர், டிச.6: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அவ்வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நலம்காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, முடநீக்கியியல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இருதய சிகிச்சை, மூளை நரம்பியல், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல சிகிச்சை, பிசியோதெரபி, கதிரியக்கவியல் மற்றும் நுரையீரல் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, ஸ்கேன், எக்ஸ்ரே, எக்கோ, கர்ப்பப்பை வாய்புற்று நோய், மார்பக புற்றுநோய், நீரழிவு நோய் உள்ளிட்ட பரிசோதனைகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இம்முகாம் கடந்த ஆக்.2 ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement