தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்களால் நோயாளிகள் அவதி அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அருமனை, ஜூலை 31: அருமனை அடுத்த இடைக்கோடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு வசதி உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை, 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட பணியில் இல்லை என நோயாளிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு, காலை 9 மணிக்கு மேல், தனியார் மருத்துவமனையில் முதலாம் மற்றும் 2ம் ஆண்டு நர்சிங் படிக்கும் மாணவிகள் ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்களுக்கு, இந்த பயிற்சி மாணவிகள் எப்படி ஊசி போடுவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். மருந்துகளை பாட்டிலில் இருந்து எடுக்க வேண்டிய அளவு குறித்தும் அவர்களுக்கு தெரியவில்லை.

அதுபோல குழந்தைகளுக்கு எந்த சிரிஞ்ச் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என பெற்றோர் குமுறுகின்றனர். அருகில் டாக்டர் மற்றும் செவிலியர் இல்லாமல் பயிற்சி மாணவர்கள் எப்படி ஊசி போட இயலும்? மருந்துகளை மாற்றி கொடுத்தால், நோயாளிகளுக்கு என்ன நிலைமை ஏற்படும் என்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும் இதனால் நோயாளிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்களின் காலதாமத வருகையால், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு மருந்து வாங்க வந்தால் மிகவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அன்றைய தினம் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.