தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிள்ளியூர் தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் 100% நிறைவு

 

Advertisement

நாகர்கோவில், டிச.1: கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 4.11.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 3,02,250, நாகர்கோவில் 2,71,185, குளச்சல் 2,76,754, பத்மநாபபுரம் 2,45,824, விளவங்கோடு 2,42,756, கிள்ளியூர் 2,54,103 என 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று கணக்கீட்டு படிவம் வழங்கி, திரும்ப பெற்று மின்னணுமயமாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் ஆகியோரின் மேற்பார்வையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 270 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 2 லட்சத்து 54 ஆயிரத்து 103 வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கியும், பூர்த்தி செய்த படிவங்களை திரும்பவும் பெற்றனர். தற்போது மின்னணுமயமாக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News