தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குழித்துறையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்தி வாலிபர் ரகளை

 

மார்த்தாண்டம், ஜூலை 24: குழித்துறை நகராட்சி சார்பில் 100வது வாவுபலி பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பொருட்காட்சி நடைபெறும் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு குழித்துறை- ஆலஞ்சோலை சாலையில் இரவு மதுபோதையில் வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். பின்னர் அவர் திடீரென சாலையின் குறுக்கே தனது பைக்கை நிறுத்திவிட்டு போக்குவரத்திற்கு இடையூராக பிற வாகனங்களில் வந்த நபர்களை மிரட்டினார்.

மேலும் மதுபோதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் போலீசார் யாரும் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சிலர் போதையில் இருந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலையின் குறுக்கே நிறுத்தியிருந்த பைக்கை எடுக்காமல் ரகளையை தொடர்ந்தார்.

அப்போது சிலர் செல்போன்களில் வீடியோ எடுப்பதை பார்த்த போதை வாலிபர் பைக்கை எடுத்து அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இதையடுத்து போக்குவரத்து சீரானது. பொருட்காட்சி நடைபெறும் பகுதியில் அதிகளவில் மக்கள் திரள்வதாலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் போலீஸ் பாதுகாப்பை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related News