தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

 

போரூர்: சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளம்பெண், நேற்று முன்தினம் மாலை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் ராஜேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

அவர் என்னை காதலிப்பதாக கூறினார். பின்னர், தனியார் விடுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் தொந்தரவு செய்தார். தற்போது எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவரை கைது செய்தனர்.