தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் சிக்கன் பர்கரில் புழுக்கள்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

 

போரூர், ஜூலை 26: ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எப்ரின்(38). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பருத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு, 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், வனிதா நேற்று மாலை தனது மகள்களுடன் பரித்திப்பட்டில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்றார்.

அப்போது, வனிதா தனது மகள்களுடன் சிக்கன் பர்கர், சிக்கன் விங்ஸ் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டார். அப்போது, சிக்கன் பர்கரின் உள்ளே புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும், தனது கணவர் எப்ரினை கடைக்கு வரவழைத்து புகார் தெரிவித்தார். அப்போது, கடை ஊழியர்கள் அலட்சியமாக பதலளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தம்பதியினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர், அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் விசாரித்தனர். மேலும், புழு இருந்த பர்கரை சாப்பிட்ட சிறுமிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளிக்குமாறு போலீசார் தெரிவித்தனர்.

அதன்பேரில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேலன் தலைமையிலான குழுவினர் கடையில் இருந்த உணவுப் பொருட்கள், தயாரித்து வைக்கப்பட்டிருந்த பர்கர்கள் ஆகியவற்றை சோதனை செய்தனர். மேலும், உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். பிரபல கடையின் பர்கரில் புழுக்கள் இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related News