தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, சாலவாக்கம் கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சாலவாக்கம் கிராமத்தை சேர்ந்த 123 மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி அருகே சமையற் கூடம் உள்ளது. பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் உணவுகள் சமைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் சமையலர் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. இதைகண்ட சமையலர் அறையிலிருந்து வெளியேறி சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களின் உதவியோடு தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சமையல் அறையில் இருந்த உணவு பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும், இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*இ-சேவை மைய ஊழியர் திடீர் மரணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த, மையத்தில் காஞ்சிபுரத்தை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஸ்டாலின்குமார் (43) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று வழக்கம்போல காலையில் வேலைக்கு வந்துள்ளார். சுமார் 11 மணியளவில் பணியில் இருக்கும்போது ஸ்டாலின்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News