தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் 195 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

வாலாஜாபாத், ஜூலை 31: வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள ராஜவீதியில் பாழடைந்த மண்டபம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அண்ணாந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டொன்று உள்ளதை வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் எம்.டி.அஜய்குமார் மற்றும் செயலாளர் ந.மோகனகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அந்த கள ஆய்வின் விவரம் பின்வருமாறு, இந்த கல்வெட்டு குறித்து அவர்கள் குறிப்பிட்டதாவது 1829ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு 195 ஆண்டுகள் பழமையானது. சாலிவாக சகாப்தம் ஆண்டு 4930, கலி ஆண்டு 1751, தமிழ் ஆண்டு விரோதி வருடம், ஆவணி மாதம் 10ம் நாள் வாலாஜாபாத்திலிருக்கும் ஆற்காடு காலெக்கற் வயிகறை ரிஷி கோத்திரம் கோவிந்தராவ் என்பவரின் மகன்கள் மனோஜி ராவ், சேதுராவ் ஆகியோர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சங்கராந்தி பார்வேட்டைக்கு கட்டிய சத்திரம், குளம் தோட்டம் எனவும், அதன் அளவு விவரங்களும், இச்சத்திரத்தை நிர்வகிக்க வல்லபாக்கம் கிராமத்தில் நிலம் கிரயமாக வாங்கி விட்ட விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டு செய்தியை தொல்லியல் துறையின் உதவி கல்வெட்டாய்வாளர் ப.த.நாகராஜன், உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் இரா.ரமேஷ் மற்றும் மோ.பிரசன்னா, வரலாற்று ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் ஆகியோரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பாழடைந்த மண்டபத்தை புதுப்பிக்க தன்னார்வலர்கள் குழு முயன்றபோதும் அனுமதி கிடைக்கவில்லை. மேலும், வாலாஜாபாத் வரலாற்றுச் சான்றாக திகழும் இந்த மண்டபத்தையும் கல்வெட்டையும் வருங்கால தலைமுறையினரும் அறியும் வகையில் தொல்லியல் துறை அல்லது இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாழடைந்த மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் பராமரிக்கவும் வேண்டும் எனவும் வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு யைமத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.

Related News