தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இனப்பெருக்க காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு பறவைகள் சென்றதால் வெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

மதுராந்தகம், ஜூலை 29: இனப்பெருக்க காலம் முடிந்து, குஞ்சுகள் பெரிதானதை தொடர்ந்து, பறவைகள் சொந்த நாடுகளுக்கு சென்றதால் பறவைகள் இன்றியும், பார்வையாளர்கள் இன்றியும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் நீர் மட்டம் 16 அடி உயரம். தற்போது, தண்ணீர் குறநை்த அளவே காணப்படுகிறது. இந்நிலையில், கனடா, வங்கதேசம், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றன. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரமான குளிர்காலத்தில் பறவைகள் வலசை வரத் துவங்குகின்றன. பின்னர், டிசம்பரம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் படிப்படியாக அதிகமாக தொடங்கும்.

பின்னர், இனப்பெருக்கம் முடிந்தது, மார்ச், ஏப்ரல், மே மாதத்தின் கடைசி வராத்தில் தாய்நாட்டிற்கு திரும்பிவிடுவதால் பறவைகள் எண்ணிக்கை படிப்படியாக மிகவும் குறைந்து காணப்படும்.இந்நிலையில், இந்த ஆண்டு கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், முக்குளிப்பான் மற்றும் புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை, குருட்டு கொக்கு, சாம்பல் நிற கொக்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன. இதில், 40 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி இருந்து இரண்டு மடங்காக இனப்பெருக்கம் செய்து மீண்டும் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றன. தற்போது, பறவைகள் சென்ற நிலையில் வேடந்தாங்கல் சரணாலயம் பறவைகள் இன்றியும், அதனை காண வரும் பார்வையாளர்கள் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகிறது.