தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குழிப்பாந்தண்டலம் பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் விவசாயிகள் கடும் அவதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, சிவன் கோயில் தெருவில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த, டிரான்ஸ்பார்மரில் இருந்து வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கு மின்சாரம் செல்கிறது. இப்பகுதியில், அதிகமான மின் இணைப்புகள் இருப்பதாலும், அதற்கேற்றவாறு டிரான்ஸ்பார்மர் இல்லாததால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த குறைந்த மின்னழுத்தத்தால் விவசாயிகள் கிணறு மற்றும் போர்வெல் மூலமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் இறைக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர் மின்னழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் செயலிழந்து விடுவதாகவும், அதனை சரிசெய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதேபோல், பொதுமக்களும் பல்வேறு வீட்டு மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மானாம்பதி மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்து கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Related News