தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமண மண்டபத்தில் புகுந்து மணமகள் அறையில் நகைகளை திருட முயன்ற 3 வடமாநில வாலிபர்கள் கைது: உறவினர்கள் பிடித்து உதைத்ததால் பரபரப்பு

சோழிங்கநல்லூர், ஜூன் 10: திருமணம் மண்டபத்தில் மணமகள் அறையை போலி சாவி மூலம் திறந்து நகைகள் திருட முயன்ற 3 வடமாநில வாலிபர்களை உறவினர்கள் மடக்கிப்பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

சென்னை ஜி.கே.எம்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி(43). இவர் பியூட்டிஷனாக வேலை செய்து வருகிறார். ராயப்பேட்டையில் கடந்த 7ம் தேதி அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு சிகை அலங்காரம் செய்வதற்காக சென்றார். அப்போது, இரவு உணவை சாப்பிடுவதற்காக மணமகள் அறையை வினோதினி பூட்டிவிட்டு சென்றனர்.

சிறிது நேரம் கழித்து வந்த போது, அறைக்கு முன்பு 2 பேர் நின்று இருந்தனர். ஒருவர் மாற்று சாவி மூலம் மனமகள் அறையை திறந்து உள்ளே நகைகள் மற்றும் பொருட்களை திருட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வினோதினி திருடன், திருடன் என்று அலறி கூச்சலிட்டார். உடனே மண்டபத்தில் இருந்த உறவினர்கள் 3 வாலிபர்களை மடக்கிப் பிடித்து உதைத்து ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், உத்திரபிரேதசம் மாநிலத்தை சேர்ந்த சுதிர்குமார்(33), சூரஜ்(28), பத்ரி விஷால்(19) என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் திருமணம் மண்டபத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டு, மணமகள் அறையின் மாற்று சாவி மூலம் திறந்து நகைகளை திருட முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Advertisement

Related News