தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துவங்கியது.. வெயில்... பழநி வனத்தில் தீ தடுப்பு கோடு அமைக்கப்படுமா?

பழநி, பிப். 6: திண்டுக்கல் மாவட்டத்திலேயே 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இங்கு வரிப்புலி, சிறுத்தை, கரடி, மான், கேளையாடு, யானை, காட்டு மாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்கள் அதிகளவு உள்ளன. தவிர, சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பரப்பில் ஏராளமான சருகுகள் உதிர்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் பகல் நேரங்களில் தற்போது வெயில் கொளுத்த துவங்கி உள்ளது. வெயிலின் காரணமாக தற்போது இச்சருகுகளின் மூலம் வனப்பகுதிக்குள் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Advertisement

காட்டு தீ ஏற்பட்டால் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகைகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வனத்துறையினர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். கடந்த ஆண்டு சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடு அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தீ விபத்துகள் பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனவே, வனத்துறையினர் இந்த ஆண்டும் கோடை காலத்திற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுத்து தீ தடுப்பு கோடுகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News