கொடைக்கானல் நகராட்சியில் வார்டு சபை கூட்டங்கள்
கொடைக்கானல், அக். 29: கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் வார்டு சபை கூட்டங்கள் நேற்று நடந்தன. அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்கள் தலைமை வகித்தனர். இக்கூட்டங்களில் வார்டுகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிப்பறை சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சேவைகளின் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர். முன்னதாக 17வது...
காற்றாலையில் வடமாநில வாலிபர் தற்கொலை
பழநி, அக். 29: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிக்நா மாஞ்சி மகன் செசாதேவ மாஞ்சி (18). இவர் குடும்பத்துடன் பழநி அருகே ராஜாம்பட்டியில் உள்ள செங்கல் சேம்பரில் தங்கி பணிபுரிந்து வந்தார். தந்தை பிக்நா மாஞ்சி குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு தனது மகனை அடிப்பதும், கூலிப்பணத்தை பிடுங்கி செல்வதுமாக...
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருமலைக்கேணி கோயிலில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கோபால்பட்டி, அக்.28: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் விழா நடந்தது. முன்னதாக கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து சிவபூஜை...
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல், அக்.28: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு அக்.27 முதல் நவ.3 வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு, திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும்...
இலவச பட்டா கோரி கலெக்டரிடம் மனு
திண்டுக்கல், அக்.28: இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு கல் உடைக்கும் மற்றும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர், கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், வேடசந்தூர் தாலுகா சின்ன கூவக்காபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. அதில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச...
வேடசந்தூரில் பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலை துறை தயார்
வடமதுரை அக். 25: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதனை எதிர்கொள்ள நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை துறையினர் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேடசந்தூர் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால்...
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், அக். 25: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உயரம் தடைபட்டோர் தினத்தையொட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் பொன் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர்...
வேடசந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வடமதுரை, அக். 25: வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் உருவாக்க கோரியும் கோஷமிட்டனர். இதில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ...
வடமதுரை அருகே பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கைது
வடமதுரை, அக். 24: வடமதுரை அருகே தென்னம்பட்டி சுப்பாகவுண்டன் புதூரை சேர்ந்தவர் ராஜ் (65), விவசாயி. இவரது வீட்டின் அருகே கடந்த அக்.20ம் தேதி தீபாவளியன்று அஜித்குமார் (25) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ராஜ் வீட்டில் கட்டி இருந்த 2 பசுமாடுகள் வெடி சத்தத்தில் மிரண்டு கயிற்றை அறுத்து...