வீடு புகுந்து 7.5 பவுன் நகை, பணம் கொள்ளை
வேடசந்தூர், டிச. 13: வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65). வேடசந்தூரில் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் நூறு நாள் வேலைக்குச் சென்று வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 7.5 பவுன் நகை மற்றும்...
தாலுகா அலுவலகங்களில் டிச.14ல் பொது விநியோக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திண்டுக்கல், டிச. 13: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் டிச.14ம் தேதி பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல்...
வடமதுரை நான்கு வழிச்சாலையில் ‘ராங் சைட்’ பயணத்தால் அடிக்கடி விபத்து
வடமதுரை, டிச. 12: வடமதுரை பகுதி நான்கு வழிச்சாலையில் ராங் சைடில் வாகனங்களை ஓட்டி வருபவர்களால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வடமதுரை நகரின் வடக்கு பகுதியில் திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலை செல்கிறது. இதில் இடது புறமாக செல்லும் சாலை திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்கிறது....
பயிர்களுக்கு சாம்பல் சத்தை பரிமாற்றம் செய்யும் முறைகள் வேளாண் துறையினர் ஆலோசனை
பழநி, டிச. 12: மண்ணில் உள்ள சாம்பல் சத்தை பயிர்களுக்கு பரிமாற்றம் செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: பழநி திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் புதிய பொட்டாஷ் பாக்டீரியா திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பயிர் வளர்ச்சிக்கு...
பழநியில் வாலிபர் தற்கொலை
பழநி, டிச. 12: பழநியில் உள்ள குபேரபட்டிணத்தை சேர்ந்தவர் சரவணன் (20). டீக்கடை தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவருக்கு பெற்றோருடன் கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் மனமடைந்த நிலையில் காணப்பட்ட சரவணன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
மஞ்சப்பை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் முதல் பரிசு ரூ.10 லட்சம்
திண்டுக்கல், டிச.11: திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கை பைகள் மற்றும்...
நாளை மின்தடை பகுதிகள்
வேடசந்தூர், டிச.11: வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை, கேத்தம்பட்டி, தோப்புப்பட்டி, குன்னம்பட்டி, குட்டம், ஆசாரிப்புதூர், சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை(டிச.12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி...
செம்பட்டி சாலையில் மணல் குவியலால் விபத்து அபாயம்
ரெட்டியார்சத்திரம், நவ.11: ஒட்டன்சத்திரம் செம்பட்டி சாலையில், குவிந்து கிடக்கும் மணலால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம்-செம்பட்டி பிரதான சாலையில் ஆண்டரசன்பட்டி, புதுப்பாலம் ஆகிய பகுதிகளில் சாலையின் ஓரங்களில் இருபுறமும் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக நடந்து செல்லும் விதமாக பேவர் பிளாக்...
உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனம் பறிமுதல்: பழநி நகராட்சி எச்சரிக்கை
பழநி, டிச.10: பழநி நகர் பகுதியில் செப்டிக் டேங்க் அகற்றும் வாகனங்களுக்கு லைசன்ஸ் பெற வேண்டுமென நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பழநி நகராட்சி அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள்...