தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திண்டுக்கல் வந்த ரயிலில் 11 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல்

 

திண்டுக்கல், ஜூலை 30: கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா புகையிலைப் பொருட்கள் வெளிமாநில மது பாட்டில்கள் ரயில்களில் கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஏட்டுக்கள் ராஜா, சந்திரசேகர், வெங்கடேஸ்வரன், குமார், சக்தி சண்முகம், மற்றும் தனிப்பிரிவு போலீசார் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து அந்த ரயிலில் ஏறி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்தப் பையில், 11 கிலோ மதிக்கத்தக்க கஞ்சா பார்சல் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அதனை பறிமுதல் செய்த போலீசார் யார் எங்கிருந்து கடத்தி வந்தார்கள் என்றும் போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.