தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டிரான்ஸ்பார்மர் பழுதால் இருளில் மூழ்கிய கிராமம்

 

அரூர், ஜூலை 14: டிரான்ஸ்பார்மர் பழுதால் அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாளாக இருளில் மூழ்கியுள்ளது. அரூர் தாலுகா, எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்பாதையில் இருந்து 25 கிலோவாட் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டிரான்ஸ்பார்மரில் திடீரென பழுது ஏற்பட்டதால், கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. எல்லப்புடையாம்பட்டியில் புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும்போதே மின்கம்பம் உடைந்துள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தில் மின்மாற்றி அமைத்ததால், பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், டிரான்ஸ்பார்மரை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.