பள்ளத்தில் சாய்ந்த கன்டெய்னர் லாரி
நல்லம்பள்ளி, ஆக.6: பெங்களூருவில் இருந்து காஸ் அடுப்பை ஏற்றிய கன்டெய்னர் லாரி, கோயம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனசேகர் (32) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி,...
ரயில் நிலையம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
தர்மபுரி, ஆக. 6: மூக்கனூர் கிராமத்தில் ரயில் நிலையம் அமைக்க, கலெக்டர் அலுவலகத்தில் கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதுதொடர்பாக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டதில் 139 பேர் ஆதரவும், 67பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். தர்மபுரி- மொரப்பூர் ரயில்வே பாதையில், ஆங்கிலேயர் காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது மூக்கனூர் கிராமம் அருகே ரயில்நிலையம் இருந்தது. பின்னர், ரயில்கள் இயக்குவது...
குடிநீர் கேட்டு சாலை மறியல்
பென்னாகரம், ஆக.5: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா ஏரியூர் அடுத்த நாகமரை பஞ்சாயத்துக்குட்பட்ட நெருப்பூர் மேல்காலனி பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மின் மோட் டாரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த...
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தர்மபுரி, ஆக.5: தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்...
முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
தர்மபுரி, ஆக.5: தர்மபுரி மாவட்டத்தில் முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.50ஆக குறைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அதகபாடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர், தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களில் இருந்து முருங்கை வரத்து, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதமாக ஒரு கிலோ...
பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
தர்மபுரி, ஆக 4: தர்மபுரி செந்தில்நகர் வாத்தியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி சுதா(32). இவரது 7 வயது குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குழந்தைக்கு துணையாக அருகில் படுத்திருந்த சுதாவிடமிருந்து, மர்ம நபர் ஒருவர் பர்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றை...
தென்பெண்ணையாற்றில் புனித நீராட குவிந்த மக்கள்
அரூர், ஆக.4: ஆடிப்பெருக்கையொட்டி, அரூர் அருகே அம்மாபேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்த மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஒகேனக்கல்லில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்ட நிலையில், கூட்டம் குறைவாக இருந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள சென்னம்மாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று...
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க நெறிமுறைகள் அறிவிப்பு
தர்மபுரி, ஆக.4: தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த தினம், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் பிரதான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். நாடு முழுவதும் பல...
மண்புழு உர உற்பத்தி விளக்க பயிற்சி
தர்மபுரி, ஆக.3: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை துறை சார்பில், மண்புழு உற்பத்தி குறித்த அட்மா திட்ட பயிற்சி துணை வேளாண் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சோமனஅள்ளி கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சித்ரா கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,...