தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை பணிகளை பொறியாளர்கள் ஆய்வு

 

Advertisement

தர்மபுரி, ஜூலை 26: பென்னாகரம் பகுதியில் நடந்து வரும் சாலை பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தர்மபுரி கோட்ட பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பென்னாகரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் மற்றும் தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பென்னாகரம் இருவழி சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளையும், சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முடிவுற்ற பென்னாகரம்-ஒகேனக்கல் சாலை பணிகள் மற்றும் ஒகேனக்கல்- பென்னாகரம் பகுதியில் அமைக்கப்பட்ட சாலை, நாகதாசம்பட்டி முதல் பென்னாகரம் வரை அமைக்கப்பட்ட சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் மற்றும் தர்மபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், சாலையில் தார் கலவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய சாலையை துளையிட்டு அளவீடு செய்தனர். அதன் பின்பு சாலையின் அகலம், கணம் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் புருஷோத்தமன், பென்னாகரம் உதவி பொறியாளர் சிங்காரவேலு, மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Related News