ரூ.21.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூர், ஜூலை 31: தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ், அரூர் கச்சேரி மேட்டில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், அரூர் மற்றும் மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 700 மூட்டை பருத்தியை கொண்டு வந்து விவசாயிகள் குவித்தனர். ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ.7,599 முதல் ரூ.8,316 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் ரூ.21.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.