தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேதமான ஆற்றுப்பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை

தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி அருகே, சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்ட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொல்லப்பட்டி பிரிவு சாலையில் இருந்து கொல்லப்பட்டி, மூலக்காடு, தாலிகாரன் கொட்டாய் செல்லும் சாலை உள்ளது. வழிநெடுகிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போக்குவரத்து வசதிக்காக, தர்மபுரி -திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொல்லப்பட்டிக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக சனத்குமார நதி செல்கிறது. இவ்விடத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தற்போது, பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக தடுப்புச்சுவர் முற்றிலும் தகர்ந்தவாறு காணப்படுகிறது. இந்நிலையில், இச்சாலை வழியாக பள்ளி கல்லூரி பஸ்கள், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. ஆனால், பாலம் மிகவும் குறுகிய அளவில் உள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, சேதமடைந்துள்ள பாலத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய ஆற்றுப்பாலத்தை கட்ட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.