தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜிஎஸ்டி பில் இல்லாமல் வந்த ஆயில் வாகனம் சிறைபிடிப்பு

 

தர்மபுரி, ஆக.3: முன்னணி நிறுவனத்தின் பெயர் கொண்ட இன்ஜின் ஆயிலை, ஜிஎஸ்டி பில் இல்லாமல், சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு கொண்டு வந்த வாகனத்தை, சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டத்தில் இருந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி பில் இல்லாமல், வாகனங்களுக்கு தேவையான போலியான இன்ஜின் ஆயில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட கல்ப் இன்ஜின் ஆயில் டீலர் மேலாளர் ராஜசேகர் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். சேலம்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி அருகே சேசம்பட்டி பிரிவில், தர்மபுரி நோக்கி வந்த மினி சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ மொபைல்ஸ் கடைகளுக்கு ஜிஎஸ்டி பில் இல்லாமல், வாகனங்களுக்கான இன்ஜின் ஆயில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை சிறைபிடித்து, அதியமான்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஆயில்களுடன் சேர்த்து வாகனத்தை வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News