தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கம்மாபுரம் அருகே தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் கைது: 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

 

மங்கலம்பேட்டை, ஜூலை 26: மங்கலம்பேட்டை அருகே நிலத்தகராறில் தாயை துப்பாக்கியால் சுட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் கம்மாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி பத்மாவதி(70). இவரது மகன் வீரபாண்டியன் (39). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை நிலத்தகராறு காரணமாக தான் வைத்திருந்த ஏர் கன் வகையை சார்ந்த துப்பாக்கியால் தனது தாயை தொடையிலும், தோள்பட்டையிலும் சுட்டுள்ளார்.

இதில் காயமடைந்த பத்மாவதி விருத்தாசலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பினார். இதனிடையே தகவலறிந்த உளவு பிரிவு போலீசார் அவர்களின் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் கம்மாபுரம் போலீசார், வீரபாண்டியனை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கடலூர் எஸ்பி ஜெயக்குமார் கம்மாபுரம் தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கொளஞ்சி ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Related News