தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகூர் அருகே விதிமீறி சாராயம் விற்றவர் கைது

பாகூர், ஏப். 11: தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார், பறக்கும் படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மது கடத்தலை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானம், சாராயம் வழங்குவதை தடுக்கவும் புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் உள்ள எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மணமேடு பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக சிறப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து கரையாம்புத்தூர் போலீசாருடன் இணைந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணமேடு பாலத்தின் கீழே ஒரு கும்பல் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் அந்த கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரித்ததில் அவர், மணமேடு பகுதியை சேர்ந்த அங்காளன் (41) என்பதும், திருட்டுத்தனமாக சாராய விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து (180 மி.லி) 374 சாராய பாக்கெட்டுகள், ரூ.4,650 பணம், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ.12 ஆயிரம் இருக்கும். பின்னர் அங்காளனை கைது செய்து, சாராய பாக்கெட்டுகளை கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Related News