தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு பஸ் பயன்பாடு அதிகரிப்பு 3200 பேருக்கு புதிதாக பணி: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

 

கடலூர், ஜூலை 25: போக்குவரத்து துறையில் 3 ஆயிரத்து 200 பேருக்கு புதிதாக பணி வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். இது குறித்து அவர் கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரி நடத்தியதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இந்த வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளேன். ஆகஸ்ட் 5ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அரசிடம் தற்போது ரூ.3 ஆயிரம் கோடி நிதி இல்லை. கடந்த காலங்களில் அந்த பணத்தை எடுத்து செலவிடப்பட்டுள்ளது. அதற்காக அரசு பணத்தை ஒதுக்கீடு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற பிரச்னைக்கெல்லாம் முதலமைச்சர் தீர்வு காண்கிறார். இப்போது நமது முதலமைச்சர், பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிதாக 655 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 3200 பேர் எடுக்கப்பட உள்ளனர். கடந்த காலத்தின் பாக்கி தொகைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு வழங்கக்கூடிய நிதியில் இருந்து பெரும்பாலானவை போக்குவரத்து துறையின் கடனுக்கு பயன்படுத்தி வருவது என்பது பொய்யான தகவலாகும். போக்குவரத்து துறைக்கு தமிழ்நாடு அரசு நிதியில் இருந்து தான் நிதி வழங்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஒவ்வொரு தீபாவளிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு பஸ்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனியார் பஸ் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு நஷ்டம் ஏற்படாது. தற்போது பணியாளர்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து வருகின்றனர். அரசு பேருந்து பயன்படுத்துவது இப்போது அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர்.

தற்போது 2 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணிக்கும் அளவிற்கு முன்பதிவு அதிகரித்துள்ளது. அதேபோல முன்பதிவு இல்லாத பயணங்களும் அதிகரித்து வருகிறது, என்றார். மாநகர திமுக செயலாளர் ராஜா, பகுதி பொறுப்பாளர் சுவை சுரேஷ், தொமுச பழனிவேல், வழக்கறிஞர்கள் கார்த்தி, பாபு, திமுக வழக்கறிஞர் அணியினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related News