தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா

 

தியாகதுருகம், ஜூலை 24: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன் பிடிக்க பொதுப்பணி துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனிநபரிடம் குத்தகைக்கு விட்டனர். இதையடுத்து குத்தகைக்கு எடுத்தவர்கள் பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்களை வளர்த்து பிடித்தனர். குத்தகை காலம் நிறைவடைந்த நிலையில் பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த மீன்பிடி திருவிழாவில் அகரகோட்டாலம், அணைகரை கோட்டாலம், வாணியந்தல், பெருவங்கூர், சிறுவங்கூர், தண்டலை, சூளாங்குறிச்சி, தண்டலை, தாவடிப்பட்டு, நாககுப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரிக்குள் இறங்கி ஆர்வத்துடன் வலைகளை போட்டும், சேலைகளை கொண்டும், கைகளாலும் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

இதில் ஒவ்வொருவரும் ஐந்து கிலோ முதல் 20 கிலோ வரை கண்ணாடி, ரோகு, விரால்கள், ஜிலேபி, கெண்டை, இறால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து மூட்டை மூட்டையாக வீட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறுவர்கள் கூட்டாக பிடித்த மீன்களை சரிபாதியாக கூறு போட்டு பிரித்துக்கொண்டனர்.

Related News