தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது 2 கார் நேருக்கு ேநர் மோதி தந்தை பலி

நெய்வேலி, ஏப். 17: மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, 2 கார் நேருக்கு நேர் மோதி தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த விஜயநகரம் புது இளவரசம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார்(34). இவரது மனைவி தனலட்சுமி(28). இந்நிலையில் இவர்களது 2 வயது மகன் கோகுலுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மகன் கோகுலுடன், மனைவி தனலட்சுமி, தனது சகோதரி பவானி ஆகியோருடன் நேற்றுமுன்தினம் இரவு வடலூர் வழியாக புதுச்சேரி மருத்துவமனைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். வடலூர் அடுத்த வீணங்கேணி பாலம் அருகே வந்தபோது, எதிரே வடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் ஓட்டி சென்ற கார் மீது ேநருக்கு நேர் மோதியது. இதில் ராஜ்குமார், அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ராஜ்குமார் மனைவி, மகன் மற்றும் அவரின் சகோதரி ஆகியோரை மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து ராஜ்குமார் தந்தை ராஜேந்திரன் மந்தாரக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News