தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் மறியல்

சிதம்பரம், ஜூலை 30: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ராயப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் எழில்ராஜன் (33). இவருக்கு முத்துலட்சுமி (26) என்ற மனைவியும், நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமி இரண்டாவதாக கர்ப்பம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முத்துலட்சுமிக்கு அங்குள்ள மருத்துவர்கள் பிரசவம் பார்த்து குழந்தையை எடுக்கும்போது தாயின் வயிற்றிலேயே பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் முத்துலட்சுமி உறவினர்களிடம் பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவர்கள் அலட்சியப் போக்கு என்று மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனை எதிரே உள்ள மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.