தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயிலில் இருந்து தவறி விழுந்து சென்னை காவலர் பலி

திண்டிவனம், ஆக.2: திண்டிவனம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து ெசன்னை காவலர் பலியானார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே திண்டிவனம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்னை விழுப்புரம் மார்க்கமாக ரயில்வே இருப்பு பாதை செல்கின்றது. இப்பகுதியில் நேற்று முன்தினம் (45) வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயில்வே பாலத்தின் அருகே மழை நீர் செல்லும் பகுதியில் விழுந்து இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணை நடத்தியதில் அவர் தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இரண்டாம் நிலை தலைமை காவலராக பணிபுரிந்து வந்த அரியலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் காத்தவராயன்(44) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த ஜூலை 31ம் தேதி மதியம் அலுவலக பணி முடிந்து தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய அவர் மாலை 4 மணியளவில் திண்டிவனம் ரயில் நிலையத்தை கடந்தபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement

Related News