தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கல்வராயன்மலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்

கல்வராயன்மலை, ஜூலை 29: கல்வராயன்மலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்பாச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (45), விவசாயி. இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினசரி கல்வராயன்மலையில் உள்ள விளாம்பட்டி வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருவது வழக்கம். அதேபோல் நேற்று காலை வழக்கம்போல் விளாம்பட்டி வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கரடி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த ராஜமாணிக்கம் கரடிக்கு தெரியாமல் அங்கிருந்து நகர்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த கரடி அவரை கடுமையாக தாக்கியதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் வனப்பகுதியில் கிடந்த அவரை அவ்வழியாக சென்ற செல்வம் என்பவர் பார்த்துவிட்டு உடனடியாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் ராஜமாணிக்கத்தை மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு 80 தையல்கள் போடப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறை மற்றும் கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் கல்வராயன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News