தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான பிரபல ரவுடி மீது குண்டாஸ்

 

புதுச்சேரி, ஆக. 4: புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (எ) திருநாவுக்கரசு (44). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் 26ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவரை சேர்த்து, லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, ஐகோர்ட் உத்தரவின்பேரில் சிபிஐக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. வழக்கின் ஆவணங்களை சிபிஐயிடம் கடந்த 30ம் தேதி லாஸ்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ணன் ஜாமீனில் வெளிவந்தார். 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. கோர்ட்டில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்ணன் தலைமறைவானார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய லாஸ்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்து மாவட்ட நீதிபதியான கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தனர். அதன்பேரில், கர்ணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் கடந்த 31ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, கர்ணனை குண்டாசில் கைது செய்வதற்காக லாஸ்பேட்டை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில் தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதை அறிந்து, அவரை நேற்று முன்தினம் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Related News