தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வக்கீல் படுகொலையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பணி பறக்கணிப்பு போராட்டம்

 

கோவை, ஜூலை 31: வக்கீல் படுகொலையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் நீதிமன்ற ஆணையின்படி நீதிமன்ற ஊழியர் மற்றும் சர்வேயர் உடன் 28ம் தேதி பள்ளியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதனை அளவிட சென்னை வழக்கறிஞர் முருகானந்தம் சென்றார். அப்போது, சமூக விரோதிகளால் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார்.

இதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், நேற்று ஒருநாள் வழக்கறிஞர்கள் தங்கள் பணியை பறக்கணிப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூட்டுக்குழுவினர் கூறியதாவது: வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது தடுக்க பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி பல போராட்டங்களை (ஜேஏஏசி) நடத்தியுள்ளது.

தமிழக முதல்வர், சட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வற்புறுத்தி கேட்டுக் கொண்டோம். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்றிட வற்புறுத்தியும், நேற்று ஒருநாள் வழக்கறிஞர்கள் தங்கள் பணியிலிருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற பணியை புறக்கணித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Related News