மாநகராட்சி 5-வது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு
கோவை, அக். 18: கோவை மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தண்ணீர் விநியோகம் செய்யும் ஊழியர்கள், தெருவிளக்கு பழுது பார்க்கும் ஊழியர்கள் உள்ளிட்ட கீழ்நிலை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவற்றை, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தேசிய செயலாளரும், வார்டு கவுன்சிலருமான நவீன்குமார் வழங்கினார்....
அதிமுகவினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்
கோவை, அக். 18: கோவை ஆர்.எஸ்.புரம் 72வது வார்டில் அதிமுகவை சேர்ந்த பாகமுகவர் பிரகாஷ், தலைமையில் 50 பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில், பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில், முன்னாள் கவுன்சிலர் அம்சவேணி, கிருபா சபரிநாதன், வட்ட செயலாளர்கள்...
செஞ்சேரி மலையில் நூலகம் திறப்பு விழா
சூலூர், அக்.17: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா நடைபெற்றது. பெரிய வதம்பச்சேரி நல்லூர்பாளையம் ஜல்லிபட்டி, குமாரபாளையம், செஞ்சேரிமலை மற்றும் நகர களந்தை போன்ற பகுதிகளில் தார் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு, நூலகம் திறப்பு...
கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்
கோவை, அக்.17 : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக இன்றும் (அக்.17), 18,...
ரேசன் கடையை சேதப்படுத்திய யானை
கோவை,அக்.17: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மடத்தூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தடாகம் அருகே உள்ள...
நீரிழிவு நோய் மருத்துவர் பாலமுருகனுக்கு கோல்டன் டாக்டர் விருது
கோவை, அக்.16 : கோவை ராம்நகரில் செயல்பட்டு வரும் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு கோல்டன் டாக்டர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜிஆர்டி ஜிவல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோவை ராடிசன் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது....
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மருதமலைக்கு தனியார் வாகனங்களில் செல்ல தடை
கோவை, அக்.16 : கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளது. இதனால் இந்த நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து...
போத்தனூர், ஸ்ரீராம் நகரில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்
கோவை, அக். 16: கோவை போத்தனூர், ஸ்ரீராம் நகரில் மாநகராட்சி கழிவு நீர் பண்ணை வளாகம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைக்கழிவுகளும் அங்கு கொட்டப்படுகின்றன. இதனால் அருகே வசிக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பை கழிவுகளால் அந்த சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி...
தடுப்பணையில் முதியவர் சடலம் மீட்பு
மேட்டுப்பாளையம், அக்.14: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சமயபுரம் தடுப்பணை பகுதியில் நேற்று ஆண் சடலம் தண்ணீரில் மிதந்த படி இருப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு...