மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

பாலக்காடு, டிச.8: பாலக்காட்டில் மாவட்ட அளவில் கொடிநாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் மாதவிக்குட்டியிடம் இருந்து என்.சி.சி மாணவர்கள் உண்டியலில் கொடி நாள் தொகை வசூலித்தனர். இந்த தினத்தில் அதிகபட்சமாக பணம் சேகரிக்கின்ற கல்வி நிறுவனத்திற்கும், என்.சி.சி பட்டாலியன் குழுவினருக்கும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட...

புனித சவேரியார் ஆலய தேர்த் திருவிழா

By Ranjith
7 hours ago

கோவை, டிச.8: கோவை சவுரிபாளையத்தி்ல் உள்ள புனித பிரான்சீஸ் சவேரியார் ஆலயத் தேர்த் திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 30 ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தினமும் திருப்பலியும், நவநாளும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், கூட்டு பாடல் திருப்பலியும், அதில் புதுநன்மையும், உறுதி பூசதலும் நடைபெற்றது....

தடையை மீறி ஆர்ப்பாட்டம்

By Ranjith
7 hours ago

கோவை, டிச. 8: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை செல்வபுரம், காந்தி பார்க் பகுதியில் தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். அதேபோல இந்து மக்கள்...

கிராம பகுதிகளில் வேலை வாய்ப்பு திட்டம்

By Arun Kumar
06 Dec 2025

  கோவை, டிச.7: கோவை மாவட்டத்தில் ஆனைமலை, அன்னூர், காரமடை வட்டாரங்கள் மற்றும் அதை சார்ந்த சில கிராமங்கள் பின் தங்கி பகுதியாக இருக்கிறது. இங்கே தொழில், வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவ வசதிகள் செய்ய ேவண்டும். வளர்ச்சி திட்டங்கள், பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பங்களிப்பு...

சபரிமலை சீசன் காரணமாக கோவையில் நேந்திரன் பழம் கிலோவுக்கு ரூ.15 உயர்வு

By Arun Kumar
06 Dec 2025

  கோவை, டிச. 7: கோவையில் நேந்திரன் பழம் மற்றும் சில வகை வாழைப்பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் கிலோ ரூ.35க்கு விற்கப்பட்ட கதலி வாழைப்பழம், தற்போது ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, அக்டோபரில் ரூ.12 முதல் ரூ.13க்கு விற்கப்பட்ட நேந்திரன் வாழை தற்போது ரூ.28...

கோவை மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்

By Arun Kumar
06 Dec 2025

  கோவை, டிச. 7: கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் அடிப்படையில் தற்போது வரை இறந்த வாக்காளர்கள் 1.13 லட்சம் பேர் உள்பட மொத்தம் 5 லட்சம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) பணி நடந்து வருகிறது....

பொதுமக்கள் விரட்டியதும் பிளிறியபடி ஓடிய யானை

By Arun Kumar
05 Dec 2025

  மேட்டுப்பாளையம், டிச.6: மேட்டுப்பாளையம் அருகே உலா வந்த ஒற்றை யானையை போ.. சாமி... போ என செல்லமாக பொது மக்கள் விரட்டியதும் கால்நடைகளையும், மனிதர்களையும் பிளிறியபடி எச்சரித்து விட்டு ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை...

நண்பரை தாக்கியதை தட்டி கேட்ட தொழிலாளிக்கு அடி, உதை

By Arun Kumar
05 Dec 2025

  கோவை, டிச. 6:நண்பரை தாக்கியதை தட்டி கேட்ட தொழிலாளியை அடித்து உதைத்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ் (20). இவர், போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி வேலையை முடித்து வீடு திரும்பினார். அப்போது, அவரது...

டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

By Arun Kumar
05 Dec 2025

  பொள்ளாச்சி, டிச.6: பொள்ளாச்சி அருகே டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் நேற்று, மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு எம்எல்ஏவும், அதிமுக அமைப்பு செயலாளருமான செ.தாமோதரன் கலந்துகொண்டு, ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், வடக்கு...

திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்கள் அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை

By Arun Kumar
04 Dec 2025

  கோவை, டிச. 5: கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்களை கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கோவை மாநகரில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், தள்ளுவண்டிகளை மாற்றி கூடுதல் வாகனங்களை கொண்டு குப்பை சேகரிப்பு பணியை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, அரசிடம் கூடுதல் வாகனங்கள் கேட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து...