தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேளாண் பல்கலை.யில் காலநிலை மாற்ற தரவுகள் குறித்த கலந்துரையாடல்

 

கோவை, ஜூலை 30: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவர மூலகூறுவியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் மையத்தில் காலநிலை மாற்றத்தில் பெரிய தரவுகளைக் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.  இதில், அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் சுற்றுசூழல் அறிவியல் துறையின் தரவு மைய இயக்குனர் கிரி பிரகாஷ் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வேளாண் பல்கலை.யில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், தாவர மூலகூறுவியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் மையத்தின் இயக்குனர் செந்தில் நடேசன் வரவேற்றார். அப்போது, அவர் காலநிலை அறிவியலில் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களை பெரிய தரவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை விளக்கினார். காலநிலை வடிவங்களை மாதிரியாக்குதல், சுற்றுச்சூழல் தாக்கங்களை முன்னறிவித்தல் மற்றும் கொள்கை முடிவுகளை ஆதரிப்பதில் உயர் செயல்திறன் கணினி, தரவு ஒருங்கிணைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பங்கை அவர் வலியுறுத்தினார்.

காலநிலை மாற்ற மாதிரியாக்கம், தரவு துல்லியம், இயந்திர கற்றல் பயன்பாடுகள் மற்றும் ஏஐ சார்ந்த காலநிலை ஆராய்ச்சியில் நெறிமுறை பரிசீலனைகள் குறித்த கேள்விகளை இறுதி மற்றும் மூன்றாம் ஆண்டு உயிரித்தொழில்நுட்பவியல் மற்றும் உயிரி தகவலியல் மாணவர்கள் எழுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் கிரி பிரகாஷ் பதிலளித்தார்.