தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தில் வந்த வாலிபர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடியதால் பரபரப்பு

 

சூலூர், ஜூலை 30: சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் போலீசாரை பார்த்ததும் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தப்ப முயன்றார். அப்போது போலீசார் துரத்தி பிடித்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் உதவி ஆய்வாளர் முருகானந்தம் ஈடுபட்டார்.

அப்போது, நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அதனை ஓட்டி வந்த இளைஞர் காவல்துறையினரை கண்டதும் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். தொடர்ந்து, காங்கேயம்பாளையம் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். உதவி ஆய்வாளர் முருகானந்தம் உடனடியாக வாலிபரை துரத்தி பிடித்து சூலூர் காவல் நிலையம் கூட்டி வந்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், வாலிபர் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியை சேர்ந்த தேவா என்பதும், அவர் தனது கூட்டாளிகளான 2 சிறுவர்களுடன் இணைந்து கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தேவா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 உயர் ரக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.