தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

21 கிலோ கஞ்சா விற்க முயன்றவருக்கு 14 ஆண்டு சிறை

 

கோவை, ஆக.1: திருப்பூர் காமநாயக்கன்பாளையம் போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில் எம்.ஊத்துக்குளி ரோட்டில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி சோதனை செய்தனர். அப்போது ஒரு நபர் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. போலீசார் வெள்ளை நிற சாக்கு பையுடன் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 21 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது.

போலீசார் விசாரித்த போது கஞ்சா கடத்தி வந்தவர் பெயர் நீலு குமார் பாரிக் (40) எனவும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், கஞ்சாவை பல்வேறு பகுதியில் இவர் விற்க திட்டமிட்ட விவரம் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். நீலுகுமார் பாரிக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கானது கோவை மாவட்ட இன்றியமையா பொருட்கள் மற்றும் போதை பொருள் தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கில் நேற்று போதை பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட நீலு குமார் பாரிக்கிற்கு 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1.50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரானார்.

 

Related News