தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காரமடை அருகே கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து

 

காரமடை, ஜூலை 25: காரமடை அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். காரமடை வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் புவன் பிராங்க்ளின் (23). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் (28). கட்டிட தொழிலாளி. இருவரும் நேற்று முன்தினம் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, பிராங்க்ளினுக்கு தெரிந்த இளம்பெண் குறித்து ரஞ்சித் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பிராங்க்ளின் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை குத்தியுள்ளார். இதில் ரஞ்சித்துக்கு இடது பக்க மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ரஞ்சித்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று புவன் பிராங்க்ளினை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related News