தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒரே நாளில் 5 பேர் மீது குண்டாஸ்

கோவை, ஆக. 4 : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், ஸ்பா நடத்தியும் இளம் பெண்களை விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மதன் கண்ணன் (37), திண்டுக்கலை சேர்ந்த அறிவழகன் (30), மதுரையை சேர்ந்த கோபிநாத் (34) ஆகியோர் கடந்த 2 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையிலும், பிணையில் வெளிவந்து மீண்டும் பெண்களை விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர். இதனால் மதன்கண்ணன், அறிவழகன், கோபிநாத் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.இதேபோல சரவணம்பட்டி பகுதியில் ஹேமந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணபதியை சேர்ந்த அருண்குமார் (29), கோவை மாநகரில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரத்தினபுரியை சேர்ந்த சுஜிமோகன் (29) ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகல்கள் கோவை மத்திய சிறையில் உள்ள இவர்களுக்கு போலீசார் வழங்கினார்.