தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சரவணம்பட்டியில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 2 ஆயிரம் மனுக்கள் குவிந்தன

கோவை, ஜூலை 26: தமிழ்நாடு அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைத்திடும் வகையில் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று மனுக்கள் வாங்கி தீர்வு காண ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளில் 43 சேவைகளும், கிராமப்புறத்தில் 15 துறைகளில் 45 சேவைகளும் மனு மூலம் தீர்வு காணப்படுகிறது. இதேபோல், நேற்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதில் 4 மற்றும் 10 வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சரவணம்பட்டி, ரெவின்யூ நகர், சின்ன மேட்டுப்பாளையம், கீரணத்தம் ரோடு, கார்த்திக் நகர், அம்மன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் மனு அளித்தனர். அதில், புதிய ஆதார் கார்டு, பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், உள்ளிட்டவை கோரி பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது.

குறிப்பாக மகளிர் உரிமை கோரி 980 மனுக்கள் குவிந்தன. மனு அளித்தவர்களில் சில பயனாளிகளுக்கு உடனடி தீர்வு எட்டப்பட்டு, சான்றிதழ்களை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி வழங்கினார். உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் உதவி நகரமைப்பு திட்டமிடுனர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News