தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

தண்டையார்பேட்டை: வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் ராயபுரம் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் கலைஞர் நூலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பு விழா கேரம் விளையாட்டு மையம் பெண்கள் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வியாசர்பாடி கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து வியாசர்பாடியை சேர்ந்த தந்தையை இழந்து தாய் உதவியுடன் பயிலும் கல்லூரி மாணவி ஒருவர் லேப்டாப் வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருந்தார். அந்த மாணவிக்கு லேப்டாப் வழங்கினார்.

அதை தொடர்ந்து ராயபுரம் எம்சி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் புதிதாக அங்கு நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையை வடிவமைத்த மீஞ்சூர் சிற்பி தீனதயாளனை பாராட்டினார். அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட செரியன் நகர் பகுதியில் கேரம் அகடமியை தொடங்கி வைத்தார். அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் நூலகத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர் கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகர் காவல் நிலையம் அருகே கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார்.மேலும் ஆர்.கே.நகர் ஷூவர்ஸ் அகடமி என்ற பெயரில் பெண்கள் திறன் மேம்பாட்டு மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலாநிதி விராசாமி எம்பி எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி எபினேசர் ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் சுபேர்கான் இளைய அருணா பகுதி செயலாளர் செந்தில்குமார் வ.பெ.சுரேஷ் லட்சுமணன் ஜெபதாஸ் பாண்டியன் வழக்கறிஞர் மருது கணேஷ் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் முருகன் ஜெயராமன் நரேந்திரன் மாமன்ற உறுப்பினர் சர்வ ஜெபதாஸ் லயோலா மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Related News