இன்று பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ரத்து
சென்னை, ஜூலை 26: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை இடையே இன்று பகல் 1.15 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக கும்டிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை செல்லும் பல ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 10.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை புறப்படும் ரயில்களும், கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து திரும்பும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் லோக்கல் ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக மீஞ்சூரில் இருந்து புறப்படும்.
பணிகள் நடைபெறும் நேரத்தில், மூர் மார்க்கெட், சென்னை கடற்கரை, பொன்னேரி மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரி செல்லும் ரயில்கள் காலை 11.35 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை தோராயமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் புறப்படும்.
பொன்னேரியில் இருந்து மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரைக்கு திரும்பும் ரயில்கள் நண்பகல் 12.05 மணி முதல் மாலை 4.47 மணி வரை இயக்கப்படும்.
சூலூர்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ஒரு சிறப்பு ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும். இந்த தற்காலிக ஏற்பாடுகள், அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இணைப்பை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டுள்ளன.
* முழுமையாக ரத்து
மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டைக்கு காலை 10.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
* பகுதியாக ரத்து
காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே செல்லும். பிற்பகல் 3 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் மீஞ்சூரில் இருந்து புறப்படும்.
* சிறப்பு ரயில்கள்
பணி காலத்தின்போது, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ், சென்னை கடற்கரை, பொன்னேரி மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். பொன்னேரிக்கு ஒவ்வொரு மணி நேரமும் சேவைகள் இயக்கப்படும், மேலும் சூலூர்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மாலை 4.30 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படும்.