தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இன்று பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ரத்து

 

சென்னை, ஜூலை 26: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை இடையே இன்று பகல் 1.15 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக கும்டிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை செல்லும் பல ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

காலை 10.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை புறப்படும் ரயில்களும், கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து திரும்பும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் லோக்கல் ரயில் கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக மீஞ்சூரில் இருந்து புறப்படும்.

பணிகள் நடைபெறும் நேரத்தில், மூர் மார்க்கெட், சென்னை கடற்கரை, பொன்னேரி மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரி செல்லும் ரயில்கள் காலை 11.35 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை தோராயமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் புறப்படும்.

பொன்னேரியில் இருந்து மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரைக்கு திரும்பும் ரயில்கள் நண்பகல் 12.05 மணி முதல் மாலை 4.47 மணி வரை இயக்கப்படும்.

சூலூர்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ஒரு சிறப்பு ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும். இந்த தற்காலிக ஏற்பாடுகள், அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இணைப்பை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டுள்ளன.

* முழுமையாக ரத்து

மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டைக்கு காலை 10.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

* பகுதியாக ரத்து

காலை 9.55 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே செல்லும். பிற்பகல் 3 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் மீஞ்சூரில் இருந்து புறப்படும்.

* சிறப்பு ரயில்கள்

பணி காலத்தின்போது, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ், சென்னை கடற்கரை, பொன்னேரி மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். பொன்னேரிக்கு ஒவ்வொரு மணி நேரமும் சேவைகள் இயக்கப்படும், மேலும் சூலூர்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மாலை 4.30 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படும்.

Related News