தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விபத்தில் உயிரிழந்த மாணவன் உடல் உறுப்புகள் தானம்

 

அம்பத்தூர் ஜூலை 25: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ரகுமூர்த்தி. இவரது மனைவி லஷ்மி. இவர்களது மூத்த மகன் சந்தோஷ் (24), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2வது மகன் ஹேம்நாத் (20), நெற்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் ஒருவரை பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு, அங்கிந்து ஹேம்நாத் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். கள்ளிக்குப்பம் சர்வீஸ் சாலையில் மது போதையில் வடமாநில வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ, ஹேம்நாத் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஹேம்நாத் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தனர். ஹேம்நாத்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டால் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார். இந்நிலையில் ஹேம்நாத் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையறிந்த பெற்றோர் கதறி துடித்தனர். இதையடுத்து, அவரது இதயம், கிட்னி உள்ளிட்ட உறுப்புகளை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் தானமாக வழங்கினர். விபத்தில் படுகாயமடைந்து அவரது கண்கள் செயல் இழந்ததால், கண் தானம் அளிக்க முடியவில்லை. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News