தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோழிங்கநல்லூரில் ஏஐ மையம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

Advertisement

தாம்பரம்: சோழிங்கநல்லூரில் ஏஐ மையத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இக்னிதோ டெக்னாலஜிஸ் இன்க் ஒரு முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் டிஜிட்டல் பொறியியல் நிறுவனம், சென்னையில் உள்ள தனது இந்திய ஏஐ மையத்தை பெரியளவில் விரிவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய விரிவாக்கப்பட்ட ஏஐ வசதியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். இக்னிதோ அடுத்த 2 ஆண்டுகளில் ஏஐ திறன்களை மையமாகக் கொண்டு தனது குழுவின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் இக்னிதோவின் உக்திசார் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் புதிய மையம் எல்எல்எம்கள், மெஷின் லேர்னிங் மற்றும் ஜெனரல் ஏஐ போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, அதிக செயற்கை நுண்ணறிவு முகவர்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement