தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார்: சாவிலும் இணை பிரியாத தம்பதி

சென்னை: சென்னை கே.கே.நகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (72). வீட்டின் அருகே உள்ள விநாயகர் ேகாயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி சாந்தி (61) என்பவருடன் தனியாக வசித்து வந்தார். மூர்த்தி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவிக்கு இரதய நோய் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உணவு சாப்பிட்டு இருவரும் தூங்கியுள்ளனர். பிறகு இரவு தனது கணவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் தனது மருமகன் கார்த்திக் என்பவருக்கு சம்பவம் குறித்து சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement

அதன்பிறகு கார்த்திக் வீட்டிற்கு வந்து பார்த்த போது, சாந்தி தனது கணவர் மீது சாய்ந்த நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். அவரது கணவரும் அதே நிலையில் இருந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இருவரையும் மீட்டு கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மரு்துதவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, இருவரும் வரும் வழியில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மருமகன் கார்த்திக் அளித்த தகவலின்படி கே.ேக.நகர் போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Related News