தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பழைய இரும்பு குடோனில் ராட்சத ஆசிட் டேங்க்கை உடைத்தபோது காஸ் கசிவு: கண் எரிச்சலால் பொதுமக்கள் அவதி

 

திருவொற்றியூர், ஜூலை 26: திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெருவில் ராமலிங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான குடோன்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள ஒரு பழைய இரும்பு பொருட்களை வியாபாரம் செய்யும் குடோனில், நேற்று ராட்சத ஆசிட் டேங்கரை அங்குள்ள பணியாளர்கள் வெட்டி உடைக்க முயன்றனர். அப்போது, அந்த டேங்கரிலிருந்து காஸ் கசிந்தது.

இதை பார்த்த பணியாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து உடைந்த டேங்கர் வழியாக வேகமாக காஸ் வெளியேறியதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், இருமல், மூச்சுத் திணறல், குமட்டல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.

தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தண்ணீர் மற்றும் பிரத்யேக திரவத்தை கொண்டு காஸ் கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பாதுகாப்பு மற்றும் அனுமதி இல்லாமல் இந்த குடோன் ஆபத்தான முறையில் இயங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விபத்து ஏற்பட்ட குடோனை சீல் வைத்தனர்.

Related News